Tuesday 27 December 2011
Tuesday 20 December 2011
Sunday 18 December 2011
Sherlock Holmes: A Game of Shadows - ஹாலிவுட் கொண்டாட்டம்
நூறாண்டுகளுக்கு மேலாக உலகைக் கட்டிப் போட்ட துப்பறியும் நிபுணர் Sherlocks Holmesன் பல படங்கள் இதற்கு முன் பல தசாப்தங்களாக எடுத்து வந்த் போது 2009ம் ஆண்டு Robert Downey Jnr நடித்து வெளி வந்த Sherlock Holmes திரைப்படம் தான் அவரை முழுதாகக் காட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது இரண்டாவது வெளியீடு...
Tuesday 13 December 2011
Monday 12 December 2011
Sunday 11 December 2011
Tuesday 6 December 2011
Sunday 4 December 2011
Tuesday 29 November 2011
Sunday 27 November 2011
Friday 25 November 2011
மாவீரர் நினைவெழுச்சி நாள் - 2011
மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். வித்தாகி வீழ்ந்த எம் மண்ணின் மைந்தர்களை ஆண்டின் ஒவ்வொரு நாளும் வணங்கினாலும் நம் இயக்கத்தின் போராட்டத்தில் முதலாவதாகத் தன் இன்னுயிர் நீத்த போராளி சங்கரின் நினைவு தினத்தை மாவீரர் எழுச்சி நாள் என்று எங்கள் தலைவர் அறிவித்து ஆண்டு தோரும் அதை சிறப்பாக நிகழ்த்தியும் காட்டினார். தலைவர் நம்மிடையில் இல்லாமல் இருக்கும் இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் அவர் கனவுகளில் நம்மால் முடிந்தவை சிலதையாவது திறம் படச் செய்வோமே...
Thursday 24 November 2011
Tuesday 22 November 2011
Sunday 20 November 2011
Friday 18 November 2011
பழைய புகைப்படங்களில் ஏன் சிரிப்பதில்லை?
இன்று Louis Daguerreயின் 224வது பிறந்த நாள். இவர் தான் புகைப்படங்களின் தந்தை. அதை கொண்டாடும் முகமாக கூகுள் இன்று வெளியிட்டு இருக்கும் கருத்துப் படம் தான் இங்குள்ளது. அதில் இருக்கும் நபர்களுக்குத் தலைகளில்லை என்ற போதும் அவர்கள் சிரிக்காமல் சந்தோஷமில்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. பழைய புகைப் படங்களைப் பார்த்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது.
Thursday 17 November 2011
Wednesday 16 November 2011
Tuesday 15 November 2011
Sunday 13 November 2011
அந்தப் பெண்ணின் மனது...
நான் ஹை-லைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளராக இருப்பதால் Landmark குழுமத்தைச் சேர்ந்த Christine Hyatt என்ற பெண்மணியோடு அடிக்கடி தொலைப்பேசியில் உரையாட வேண்டி வந்தது. நாங்கள் அந்தக் குழுமத்தின் அங்கத்தவர்கள். Christine உடனான என் வேலை முடிந்ததும், இவ்வளவு பொறுமையாக பரிவோடு தன் பணியைச் செய்த அந்தப் பெண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தது. அதிகம் இல்லை, என்னிடம் ஏற்கனவே இருந்த ஒரு Thank you வாழ்த்து அட்டையை அவளுக்கு அனுப்பி வைத்தேன்.
Friday 11 November 2011
Tuesday 8 November 2011
Sunday 6 November 2011
குழந்தைக்குள் ஏன் இந்தக் குரூரம்..?
எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவராவதும்,
தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல். புதிய பெற்றோர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது நான் உதாரணமாக மேட்கோள் காட்டும் வரிகள். இவ்வளவு காலமும் ஒருவருடைய குணத்தை நிர்ணயிப்பது மரபணுக்களாக இருந்த போதும் அதை சூழ்நிலை காரணிகளால் கட்டுப்படுத்தலாம் என்றே விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். அதாவது வளரும் காலத்தில் என்ன விதமான போதணைகள் பழக்க வழக்கங்கள் காலநிலைக் காரணிகள் என்பவற்றால் ஒரு குழந்தை பாதிக்கப் படுகிறதோ அதன் படியே அதன் உடல் மன வளர்ச்சிகள் இருக்கும் என்று கருத்து நிலவியது. ஆனால் இப்போது Cambridge மற்றும் Oxford பலகலைக் கழகங்கள் தனித்தனியாக நடத்திய ஆராய்ச்சியில் இது தவறு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
Saturday 5 November 2011
Friday 28 October 2011
Thursday 27 October 2011
Wednesday 26 October 2011
பெண்ணிற்கு 10 வயது...
மயூரி அபிராமி ஜெகன்மோகனுக்கு 10 வயதாம்... நம்பமுடியவில்லை. ஆபரேஷன் தியட்டரில் அரை மயக்கத்திலிருக்கும் போது என் கணவர் காட்டிய சின்ன பொம்மைக்குட்டியின் முகம் தான் இப்போதும் ஞாபகம் வருகிறது. அதுவரை பட்ட கஷ்டங்கள் மறந்து... 9 மாதம் புரிந்த தவத்திற்கும் 2 மாத கால மருத்துவமனை சிறை வாசத்திற்கும்... கிடைத்த பலன் என்று மனம் குதூகலித்த தருணம்.
Sunday 23 October 2011
Friday 21 October 2011
Sunday 16 October 2011
Saturday 15 October 2011
இப்படி வாழ உங்களால் முடியுமா?
ஈன்றெடுத்த தாயினால் உதாசீனப்படுத்தப்பட்ட
தத்துக் குழந்தை...
பெயருக்குப் பின்னால்பல்கலைக்கழக
பட்டம் ஏதும் இல்லை...
வெற்றியைத் தவிர வேறொன்றும்
நினைப்பில் இல்லை...
வாழும் நாட்களின்
எண்ணிக்கையைவிட...
அர்த்தங்களே முக்கியம்
என்று மீண்டும் உலகிற்கு
உணர்த்த வந்த
கம்பியூட்டர் ஏஞ்சல்..!
தத்துக் குழந்தை...
பெயருக்குப் பின்னால்பல்கலைக்கழக
பட்டம் ஏதும் இல்லை...
வெற்றியைத் தவிர வேறொன்றும்
நினைப்பில் இல்லை...
வாழும் நாட்களின்
எண்ணிக்கையைவிட...
அர்த்தங்களே முக்கியம்
என்று மீண்டும் உலகிற்கு
உணர்த்த வந்த
கம்பியூட்டர் ஏஞ்சல்..!
Thursday 13 October 2011
Monday 10 October 2011
இப்படியும் தந்தையா..?
You Tubeல் தேடிக்கொண்டு சென்ற போது "வீட்டுக்கணக்கு" என்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். மனதை என்னமோ செய்து விட்டது. எனக்கு இந்தக் கதை மிக நெருக்கமாக உள்ளதால் இருக்கலாம்.
Sunday 9 October 2011
Saturday 8 October 2011
இக்கரைக்கு...
ஒரு வழியாக கடைசி ட்ரேயை(tray) சுரண்டிக் கழுவி, சுரேன் நிமிர்ந்த போது நாரியும் முழங்காலும் கடுக்கிக் கொண்டிருந்தது. கழுவியதை எல்லாம் தூக்கிக் கொண்டு நடக்க உடம்பில் எந்த தசையெல்லாம் வேலை செய்கிறது என்பதை சுரீர் சுரீர் என்ற வலியால் உணர்த்திக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரம் தான், அதன் பின் சுரேனுக்கு விடுதலை. வாரத்தில் 5 நாட்கள் டபுள் அடிக்கிறவன். இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்து செய்வதை லண்டன் தமிழர்கள் டபுள் அடிக்கிறது என்று சொல்வார்கள். இப்படிப் பல புதிய வார்த்தைகளை கடந்த 4 ஆண்டுகளில் நிறையவே படித்து விட்டான்.
வேலை முடிந்து, துருக்கி நாட்டு மானேஞரிடம் விடை பெற்றான். “டுமோரொ ஐ சைன். நொ கமிங் வெர்க் மொர்னிங்” (Tomorrow I sign, No coming work morning) என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லிப் புறப்பட்டான்.
வேலை முடிந்து, துருக்கி நாட்டு மானேஞரிடம் விடை பெற்றான். “டுமோரொ ஐ சைன். நொ கமிங் வெர்க் மொர்னிங்” (Tomorrow I sign, No coming work morning) என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லிப் புறப்பட்டான்.
Wednesday 5 October 2011
Tuesday 4 October 2011
Saturday 1 October 2011
Friday 30 September 2011
Wednesday 28 September 2011
Saturday 24 September 2011
Friday 23 September 2011
லண்டனில் ராதிகா சரத்குமார்
இந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் உள்ள Wembley Arenaவில் Raadaan Media Works நடாத்தும் நட்சத்திர கலை விழா நடைபெறவுள்ளது. இதில் ராதிகா, சரத்குமார், சிம்பு, சினேகா, ஆர்யா, பரத், ராகவா போன்ற நட்சத்திரங்களும் ஹரிஹரன், ஆண்ட்ரியா, நரெஷ் ஐயர், விஜய் பிரகாஷ் மற்றும் பல பாடகர், பாடகிகள், நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். பல ஆயிரம் பவுண்ட்சுகள் செல்வழித்து தான் இந்த விழா நடக்கும், போட்ட முதலை எப்படியும் திருப்பி எடுத்து விட வேண்டும், அதை விட அதிக டிக்கட்டுகள் விற்பணையாகி இலாபம் ஈட்ட வேண்டும் என்று ராதிகா அம்மையார் நினைப்பதெல்லாம் சரிதான்.
Wednesday 21 September 2011
Tuesday 20 September 2011
Saturday 17 September 2011
Thursday 15 September 2011
Wednesday 14 September 2011
Sunday 11 September 2011
சிந்தித்து பேசினால்...
தமிழ்நாட்டில் ஒரு கோயில் வாசலில் எழுதியிருந்த வசனம் என்னை மிகவும் கவர்ந்தது.... இதோ உங்களுக்காக...
Saturday 10 September 2011
பைஜாமா போட்ட பையன்
ஐந்து நாட்களுக்கு முன் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அடக்க முடியாமல் அழுதேன். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடக்கும் கதை. கனவிலும் நினைவிலும் திடீர் திடீரென்று ஞாபகம் வந்து மனநிலையை பாதித்துக் கொண்டே இருக்கிறது. அது தான் உங்களுடனும் இதை பகிர்வோம் என்று முடிவெடுத்தேன்.
Thursday 8 September 2011
வீட்டில் அம்மா செய்வது போல...
நான் லண்டன் வந்த புதிதில் சமையல் செய்வதற்கென்று அம்மா பார்சலில் மிளகாய் தூள், சரக்குத்தூள், கோப்பித்தூள் இன்னும் எத்தனையோ விதமான தூள்களெல்லாம் வீட்டிலேயே செய்து அனுப்பி வைப்பார். நாளாக நாளாக அம்மாவிற்கு ஏன் சிரமம், இங்கே கடைகளில் கிடைக்கிறதை வாங்குவோம் என்று வெளிக்கிட்டேன். பல வகையான நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் இருந்தன. ஆண்டுகள் ஓட ஓட ஒவ்வொன்றாக பாவித்து மனம் கடைசியில் என்.எஸ்.ஆர் தயாரிப்புகளையே விரும்பியது. அவர்களின் அனைத்துப் பொருட்களுமே சென்னையில் தான் தயாரிக்கப்படுகிறது என்பதை உரிமையாளர் பிருந்தாபன் அண்ணா மூலம் தெரிய வந்த போது வியப்படைந்தேன். பிறகென்ன சென்னைப் பயணத்தில் பார்க்க வெண்டிய லிஸ்டில் என்.எஸ்.ஆர் தொழிற்சாலையையும் சேர்த்தாச்சு.
Wednesday 7 September 2011
மாயக்கண்ணாடி - 07/09/11
பொருளாதாரம் நலிந்தே உள்ளது...
Luton Southற்கான முன் நாள் MP Margaret Moranன் மேல் அவர் பதவிக்காலத்தில் இருந்த போது £60,000ஐ செலவீனங்கள் என்று பொய்யாக கணக்கு காட்டியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் நம்மூர் அரசியல்வாதிகளைப் போலவே இவரும் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி நீதிமன்றம் வராது தள்ளிக்கழித்தார். ஆனால் போதிய சாட்சியங்கள் கிடைத்து விட்டதாகவும் இனிமேலும் மக்கள் பணத்தை வீணடித்தவர்களுக்கு தண்டணை கொடுக்க காலம் தாழ்த்த கூடாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Facebookன் மேல் வழக்கு
தன் 12 வயது மகள், வயதிற்கு பொருத்தமில்லாத வகையில் உடை அணிந்து, Sexyயாக எடுத்த படங்களை, அவளுடைய Facebook பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறாள். இதை தடுப்பதற்கு எந்த விதத்திலும் வழிமுறைகள் செய்யாத facebook தான் முழுப் பொறுப்பு எடுக்க வேண்டும் என்று ஒரு ஐரிஷ் தந்தை வழக்கு பதிந்துள்ளார். Facebookல் கணக்கு வைப்பதற்கு 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட போதும் அதை சரி பார்க்க எந்த முயற்சிகளும் எடுக்கப் படுவதில்லை. கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை இலக்கம் போன்றதைப் பாவித்து வயதை தெரிவிப்போருக்குத் தான் கணக்கு திறக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாத்ததனால் என் மகள் நாங்கள் தடை விதித்திருந்த போதும் வேறு கணக்கை திறந்து தன் வேலைகளை செய்திருக்கிறாள். இதற்கான முழுப் பொறுப்பையும் Facebook தான் ஏற்க வெண்டும் என்பதே வழக்கு.
ஒரு தாயாக அவர் கருத்தை நானும் முழுதாக ஏற்றுக் கொள்கிறேன். வழக்கு எந்த திசையில் போகிறதென்று அவ்வப்போது தெரிவிக்கிறேன்.
இங்கிலாந்தின் நிதி அமைச்சர் George Osborne ல்ண்டனில் நடந்த ஒரு பிரபல நிதி நிறுவனத்தின் விருந்துபசாரத்தில் பேசுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ”அண்மையில் வெளி வந்த எல்லா புள்ளி விபரங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையான காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரம் 0.2% வளர்ச்சியையே அடைந்துள்ளது.” என்று தன் உரையில் தெரிவித்த ஒஸ்போர்ன் 29 நவம்பர் அன்று தன்னுடைய உத்தியோக பூர்வமான கணக்கு அரிக்கையை வெளியிடப் போவதாகவும் அரிவித்துள்ளார்.
முன்னால் அமைச்சரின் மேல் 21 பொய் கணக்கு குற்றங்கள்...
Luton Southற்கான முன் நாள் MP Margaret Moranன் மேல் அவர் பதவிக்காலத்தில் இருந்த போது £60,000ஐ செலவீனங்கள் என்று பொய்யாக கணக்கு காட்டியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் நம்மூர் அரசியல்வாதிகளைப் போலவே இவரும் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி நீதிமன்றம் வராது தள்ளிக்கழித்தார். ஆனால் போதிய சாட்சியங்கள் கிடைத்து விட்டதாகவும் இனிமேலும் மக்கள் பணத்தை வீணடித்தவர்களுக்கு தண்டணை கொடுக்க காலம் தாழ்த்த கூடாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Facebookன் மேல் வழக்கு
தன் 12 வயது மகள், வயதிற்கு பொருத்தமில்லாத வகையில் உடை அணிந்து, Sexyயாக எடுத்த படங்களை, அவளுடைய Facebook பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறாள். இதை தடுப்பதற்கு எந்த விதத்திலும் வழிமுறைகள் செய்யாத facebook தான் முழுப் பொறுப்பு எடுக்க வேண்டும் என்று ஒரு ஐரிஷ் தந்தை வழக்கு பதிந்துள்ளார். Facebookல் கணக்கு வைப்பதற்கு 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட போதும் அதை சரி பார்க்க எந்த முயற்சிகளும் எடுக்கப் படுவதில்லை. கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை இலக்கம் போன்றதைப் பாவித்து வயதை தெரிவிப்போருக்குத் தான் கணக்கு திறக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாத்ததனால் என் மகள் நாங்கள் தடை விதித்திருந்த போதும் வேறு கணக்கை திறந்து தன் வேலைகளை செய்திருக்கிறாள். இதற்கான முழுப் பொறுப்பையும் Facebook தான் ஏற்க வெண்டும் என்பதே வழக்கு.
ஒரு தாயாக அவர் கருத்தை நானும் முழுதாக ஏற்றுக் கொள்கிறேன். வழக்கு எந்த திசையில் போகிறதென்று அவ்வப்போது தெரிவிக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)