Tuesday 29 November 2011
Sunday 27 November 2011
Friday 25 November 2011
மாவீரர் நினைவெழுச்சி நாள் - 2011
மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். வித்தாகி வீழ்ந்த எம் மண்ணின் மைந்தர்களை ஆண்டின் ஒவ்வொரு நாளும் வணங்கினாலும் நம் இயக்கத்தின் போராட்டத்தில் முதலாவதாகத் தன் இன்னுயிர் நீத்த போராளி சங்கரின் நினைவு தினத்தை மாவீரர் எழுச்சி நாள் என்று எங்கள் தலைவர் அறிவித்து ஆண்டு தோரும் அதை சிறப்பாக நிகழ்த்தியும் காட்டினார். தலைவர் நம்மிடையில் இல்லாமல் இருக்கும் இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் அவர் கனவுகளில் நம்மால் முடிந்தவை சிலதையாவது திறம் படச் செய்வோமே...
Thursday 24 November 2011
Tuesday 22 November 2011
Sunday 20 November 2011
Friday 18 November 2011
பழைய புகைப்படங்களில் ஏன் சிரிப்பதில்லை?
இன்று Louis Daguerreயின் 224வது பிறந்த நாள். இவர் தான் புகைப்படங்களின் தந்தை. அதை கொண்டாடும் முகமாக கூகுள் இன்று வெளியிட்டு இருக்கும் கருத்துப் படம் தான் இங்குள்ளது. அதில் இருக்கும் நபர்களுக்குத் தலைகளில்லை என்ற போதும் அவர்கள் சிரிக்காமல் சந்தோஷமில்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. பழைய புகைப் படங்களைப் பார்த்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது.
Thursday 17 November 2011
Wednesday 16 November 2011
Tuesday 15 November 2011
Sunday 13 November 2011
அந்தப் பெண்ணின் மனது...
நான் ஹை-லைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளராக இருப்பதால் Landmark குழுமத்தைச் சேர்ந்த Christine Hyatt என்ற பெண்மணியோடு அடிக்கடி தொலைப்பேசியில் உரையாட வேண்டி வந்தது. நாங்கள் அந்தக் குழுமத்தின் அங்கத்தவர்கள். Christine உடனான என் வேலை முடிந்ததும், இவ்வளவு பொறுமையாக பரிவோடு தன் பணியைச் செய்த அந்தப் பெண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தது. அதிகம் இல்லை, என்னிடம் ஏற்கனவே இருந்த ஒரு Thank you வாழ்த்து அட்டையை அவளுக்கு அனுப்பி வைத்தேன்.
Friday 11 November 2011
Tuesday 8 November 2011
Sunday 6 November 2011
குழந்தைக்குள் ஏன் இந்தக் குரூரம்..?
எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவராவதும்,
தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல். புதிய பெற்றோர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது நான் உதாரணமாக மேட்கோள் காட்டும் வரிகள். இவ்வளவு காலமும் ஒருவருடைய குணத்தை நிர்ணயிப்பது மரபணுக்களாக இருந்த போதும் அதை சூழ்நிலை காரணிகளால் கட்டுப்படுத்தலாம் என்றே விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். அதாவது வளரும் காலத்தில் என்ன விதமான போதணைகள் பழக்க வழக்கங்கள் காலநிலைக் காரணிகள் என்பவற்றால் ஒரு குழந்தை பாதிக்கப் படுகிறதோ அதன் படியே அதன் உடல் மன வளர்ச்சிகள் இருக்கும் என்று கருத்து நிலவியது. ஆனால் இப்போது Cambridge மற்றும் Oxford பலகலைக் கழகங்கள் தனித்தனியாக நடத்திய ஆராய்ச்சியில் இது தவறு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
Saturday 5 November 2011
Subscribe to:
Posts (Atom)