உலகிலேயே 2 கண்டங்களில் அமைந்திருக்கும் ஒரே நகரம் இஸ்தான்புல் மட்டுமே.. 2500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்க நகரம். ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரம்.. பின் ஒட்டமன் ராஜ்யத்தின் முக்கிய கேந்திரமாக இருந்தது. இப்போது கூட துருக்கி நாட்டின் தலைநகரமாக இல்லாத போதும், முக்கிய நகரம் இதுவே.

இந்த நகரத்தின் ஆசிய ஐரொப்பா பகுதிகளை பொஸ்பரஸ் என்ற நீர்நிலை பிரிக்கின்றது. கருங்கடலுக்கும் மர்மரா கடலுக்கும் இடையே ஓடும் கால்வாய் தான் பொஸ்பரஸ்.


விமான நிலையத்தில் எங்களை ஏற்றிச் செல்ல லாண்ட்மார்க் குழுமம் ஏற்பாடு செய்த சொகுசு பேருந்துகள் வந்திருந்தன. அதற்குள் ஏறும் வரை தான் மயூரி எனக்கு சொந்தமாக இருந்தாள். அதற்கு பின் அவளுக்கு பல விசிறிகள். உள்ளே ஏறியதில் இருந்து இறுதியாக மீண்டும் லண்டன் வந்து அவர்களுக்கு விடை கொடுக்கும் வரை விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள். குழுவில் இருந்த ஒரே பெண் குழந்தை என்பதால் எல்லோருக்கும் செல்லம். அதுவும் எனக்கே தெரியாது எப்போது படித்தாள் என்று.. துருக்கியைப் பற்றியும் இஸ்தான்புல்லைப் பற்றியும் பல விஷயங்கள் விரல் நுனியில் வைத்திருந்தாள்.


இப்படியாக ஒவ்வொரு நாளும் பாதி வியாபர அலுவல்கள் பாதி கேளிக்கை என இனிதாகக் கழிந்தது. இரண்டு முக்கிய மசூதிகள் மற்றும் ஹாகிய சோஃபியா என்ற பழமை வாய்ந்த சர்ச்சுக்கும் சென்றோம். Bosphorusல் அடிக்கடி படகுப் பயணம் செய்தது உல்லாசமாக இருந்தது. இங்கு தரையில் ஓடும் டாக்ஸிகள் போல் அங்கு water taxi பிரபலமாக உள்ளது.
இஸ்தான்புல் என்றால் அடுத்த முக்கிய இடம் அங்கு இருக்கும் Grand Bazar. உலகிலேயே ஒரு கூரைக்கு கீழ் இருக்கும் பெரிய பஜார் இது தான். வைரம் முதல் மண் பானை வரை அனைத்தும் கிடைக்குது. மொத்தம் 61 தெருக்கள், 3000 கடைகள் உள்ளது. ஒருநாள் சராசரியாக 3 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். Peak seasonல் 4 லட்சம் வரை கூட வருவார்களாம்.
ஆனால் யார் கண் பட்டதோ.. எல்லாம் முடிந்து ஏர்போர்ட் வந்து இறங்கிய போது தான் சனி குடியேறினார். எங்கள் விமானம் 6 மணி நேரம் தாமதம் என்று அறிவிக்கப்படுது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து விமானங்களில் பயனிக்கிறேன், அதிக பட்சம் 1 மணி நேரம் கூட தாமதம் ஆனதில்லை. வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இதனால் துருக்கி என்ற பெயரையே இனி யாரும் சொல்லக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கேன். ஆனால் என்னை மீண்டும் துருக்கி போகவைக்கத் தூண்டும் ஒரு விஷயம் இருக்குமானால் அது டொண்டுமார்சி ஐஸ்கிரீம் தான். அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கடைக்காரரும் காட்டும் வித்தைகள் பல.. அதை விட சுவையும் மிக அருமை. இங்கே பாருங்கள் இந்த சிறுவன் படும் பாட்டை..
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிகு: இது என்ன சம்பந்தம் இல்லாத தலைப்பு என்று பார்க்கிறீர்களா? என் கணவர் இந்தப் பாட்டை பாடிப் பாடி... எனக்கும் தொத்திக்கிச்சு.. உடனேயே இப்படி ஒரு கீச்சைப் போட்டுட்டேன்.
பல நூற்றாண்டுகளாக இஸ்தான்புல் தன் ராஜகுமாரியைத் தேடுகிறதாம்.. அதனால் நாளை அங்கு போகலாம் என்று இருக்கேன்..
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
சுவாரஸ்யமான பயணம் ! நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க.....
அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்...பெல்லி டேன்சர் போட்டோ...ஒரு ரெண்டு மூணு போட்டு இருக்கலாம்.....: )
// நாள் ஒன்றுக்கு 500 கப்பல்களே செல்ல முடியும் என்பதால் இந்தத் தேக்கம் என்று பின்பு அறிந்தேன். //
சென்னை துறைமுக வாயிலில் கண்டெயினர் லாரிகள் காத்திருக்குமே அது போலவா...
பதிவு முழுவதையும் ரசித்தேன்... ஆனால் அந்த கடைசி ட்வீட் முடியல... என்னடா இது இஸ்தான்புல்லுக்கு வந்த சோதனை...
அருமையான பதிவு சகோதரி
சுவாரசியமாய் இருந்தது..
இஸ்தான்புல்லில் தரை இறங்க ஆயத்தம் ஆகவே.. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். நூற்றுக் கணக்கான கப்பல்கள் கண்ணுக்கு தெரிந்தது
அருமையான காட்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !
Post a Comment