Saturday 30 July 2011

காவல் துறையில் ஆட்குறைப்பு!?

இராண்டாம் உலகப் போரின் பின் UKல் நடக்கும் மிகப் பெரிய அரசாங்க செலவினக் குறைப்பின் காரணமாக காவல் துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது.இந்த ஆண்டு காவல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 6%ம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 20%ம் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதிக்குறைப்பால் காவல் துறையினரின் எண்ணிக்கை குறைவடையும். எற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்குள் UKல் தான் பொது மக்களுக்கும் காவல் துறையினருக்குமான விகிதம் மிகக் குறைவு. அதே போல் ஐரோப்பிய சராசரி குற்ற எண்ணிக்கையை விட அதிகமான குற்ற எண்ணிக்கையைக் கொண்ட நாடாகவும் உள்ளது. இந்த சூழ்நிலையில் காவல் துறையில் ஆட்குறைப்பு செய்வதால் அனேகமான குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளதாக CIVITAS ஆராய்ச்சி நிறுவனம் (national think tank) எச்சரித்துள்ளது.

குற்றங்கள் நடக்கும் இடங்களில் காவல் துறையினரின் வருகை தாமதமாவதாலும் குறைவதாலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. இது ஏனையோருக்கும் குற்றம் செய்ய தூண்டுகோளாக அமையும். இதனால் அண்மைக் காலங்களில் குறைந்து கொண்டிருக்கும் குற்ற எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆனால் காவல் துறைக்கான அமைச்சர் Nick Herbert இந்தக் கூற்றுகளை மறுக்கிறார். "New York நகரத்தில் காவல் துறையினரின் எண்ணிக்கை குறைவடைந்த போதும் அதை விட வேகமாக குற்ற எண்ணிக்கைகள் குறைந்துள்ளது. அதனால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு திறம்படச் செலவிடப் படுகிறது என்பதிலும், இருக்கும் அதிகாரிகளின் செயல் திறனிலுமே காவல் துறையின் வெற்றி உள்ளது. அவர்களின் எண்ணிக்கையில் இல்லை" என்று கூறுகிறார்.

எது எப்படியோ, கடைசியில் அல்லல் படப் போவது மக்கள் தான்...!

0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget