Saturday 30 July 2011

என்ன தவம் செய்ய வேண்டும்?

மனம் விரும்பாத போது
காதல் கணவனின்
மோக அணைப்பிலேயே
உள்ளம் வெதும்பிடும்
எனக்கு....
பல பேரால் பலாத்காரமாக
ஆட்கொள்ளப்படும்
அந்த பிஞ்சு மலர்களின்
தேகம் தவித்த தவிப்பையும்
மனம் உணர்ந்த வேதனையையும்
நினைக்கக்கூட திராணியில்லை!
மானிடராய் பிறப்பதற்கு
மாதவம் செய்ய வேண்டும்
என்றார்கள்....
ஆனால் இலங்கையில் தமிழ்
மாதராய் பிறக்காமல் இருக்க
என்ன தவம் செய்ய வேண்டும்
என்று சொல்லவில்லையே!?

2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

jgmlanka said... Best Blogger Tips

தமிழ் மாதர்களின் வேதனையை படம் பிடித்துக் காட்டும் வரிகள்... இது தமிழச்சியாய் பிறந்ததினாலோ என்று உள்ளம் கொதிக்கிறது. கவிதை அருமை அக்கா... வாழ்த்துக்கள்.

Guru said... Best Blogger Tips

அன்புச்சகோதரிக்கு உங்களின் கவிதை வரிகளில் ரொளத்திரம் வெடித்து கிளம்பட்டும்
இந்த வன்கொடுமைகளுக்கு நிச்சயம் ஒரு நாள் விடியல் பிறக்கும் . வீழ்ந்தவன் எழுவான் என்பது காலத்தின் தாரக மந்திரம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget