இலங்கையில் தமிழ் மாதராய் பிறக்காமல் இருக்க என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்று தெரியாத பேதைகளில் ஒருத்தி தான் புனிதவதி. அந்தச் சிறுமியின் வாழ்க்கையை திரைப்படமாக வெளியிடுகிறார்கள். புகழேந்தி தங்கராஜ் இயக்க, D.இமான் இசையமைக்க, கவிஞர் காசி ஆனந்தன் 2 பாடல்கள் எழுத, கதிர்மொழி என்பவரும் 2 பாடல்களுக்கு வரிகள் எழுதியிருக்கிறார். இதில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடிகர்கள் சத்யராஜ், நாசர், நடிகை சங்கீதா மற்றும் இயக்குனர் சீமான் போன்றோர் நடித்துள்ளனர்.
லண்டனில் Croydonல் உள்ள Fairfields அரங்கில் 31ம் திகதி ஜூலை மாதம் இந்தப் படத்திற்கான பாடல் வெளியிடும் விழா நடந்தது. லண்டன் வாழ் தமிழர்களால் அரங்கு நிறம்பியிருந்தது. நடிகர் சத்யராஜ், இசையமைப்பாளர் D.இமான், நடிகை சங்கீதா, பாடகி மாதங்கி, பாடகர் பல்ராம், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இங்கிலாந்தில் தமிழ் வர்த்தகர்களுக்குள் ஒருவராக இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். முன் நாள் Croydon பாராளுமன்ற உருப்பினர் Andrew Pelling, நார்வேயிலிருந்து வந்திருந்த இப்படத்தின் தயாரிப்பாள்ர்கள் மற்றும் படத்தில் பணி புரிந்த கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து மேடையில் "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படத்தின் இருவெட்டை வெளியிட்டதில் பெருமைப் படுகிறேன்.
இலங்கைத் தமிழர்களின் கதையை பாருக்குள் பரப்பிட இப்படியான படைப்புகள் பல உருவாக்கப் பட வேண்டும். இத்திரைப்படம் உருவாக காரணமான அனைவருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்றி சொல்கிறோம். குறிப்பாக சம்பளமே வாங்காமல் பணிபுரிந்த பல கலைஞர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.
1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
நிச்சயம் நல்லதொரு முயற்சி.
கேபிள் சங்கர்
Post a Comment