Wednesday 14 September 2011

மாயக்கண்ணாடி - 14/09/11


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



தாய்லாந்தில், தாய்-மயான்மார் எல்லையில் வேலை செய்து கொண்டிருந்த போது,  பா ஹே போ என்றழைக்கப்படும் யானை மயான்மார் பக்கமிருக்கும் காட்டிற்குள் மேய்ந்திருக்கிற்து. அப்போது அது கன்னி வெடியில் கால் வைத்ததால் கால் சிதறி பலத்த காயத்திற்கு உள்ளாகியது. மயான்மாரில் (பர்மா) நடக்கும் உள்நாட்டு கலவரத்தின் காரணமாக அந்நாட்டு ராணுவமும், எதிர்த்து போராடும் இயக்கமும் இப்படியான கன்னி வெடிகளை தாட்பது வெளி உலகிற்கு வந்துள்ளது.
யானையின் கால்களையே பார்க்க முடியவில்லை. இதில் கால் வைக்கும் பச்சைக் குழந்தைகளை நினைத்தால் வயிறு எரிகிறது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



இந்த வாரம் இங்கிலாந்தில் நடந்த ஒரு வழக்கில் தலைமை நீதிபதி “என்னாது?” என்று கேட்டு மயங்கி விழாத குறையாக தன்னுடைய வழக்குப் பத்திரங்களை திருப்பி திருப்பி சரி பார்த்திருக்கிறார். "Stiff upper lip" வெள்ளைக்காரர்களுக்கு இது பெரிய விடயம். ஆனால் ஏன் இந்த குழப்பம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவரிடம் வந்த ஒரு வழக்கில் ஒரு விபச்சாரி வாரம் ஒன்றுக்கு £20,000 சம்பளம் வாங்கியிருக்கிறாள் என்பதைப் பார்த்து தான் இந்த மயக்கம்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இந்த Sean Duffy  என்ற நபரை இங்கிலாந்து பத்திரிக்கைகள் பதிவுலக அரக்கன் என்று பட்டமளித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு முழுக்க கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட மற்றும் தற்கொலை செய்து கொண்ட இள வயதினரைப் பற்றி Facebook பக்கங்கள் உருவாக்கியும், அவர்களின் உறவினர்களுக்கு email மூலமும் கேலிச்சித்திரங்கள் வரைந்தும், இறந்தவர்களைப் பற்றி அவதூராக சித்தரித்து எழுதியும் இருக்கிறார். இவரது IP addressஐ வைத்து இவரைப் பிடித்து விட்டார்கள். இவருக்கு 18 மாத கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
என்னைக் கேட்டால் இவனுக்கு இது பத்தாது என்பேன். வலை உலகிற்குள் ஒழிந்திருக்கும் இந்த மாதிரி சைக்கோக்கள் தங்கள் முகத்தை காட்டாமலே எதுவும் செய்யலாம் என்ற தைரியம் தான் அவர்களை இப்படி செய்ய வைக்கிறது. மற்றபடி பயந்தாங்கொள்ளிகள்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

rajamelaiyur said... Best Blogger Tips

tamilmanam first vote

rajamelaiyur said... Best Blogger Tips

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

ராஜா சார் தமிழ் மணத்தில் முதலாவது ஓட்டு போட்டு மானத்தைக் காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி சார்.

sugi said... Best Blogger Tips

இனி மாயக்கண்ணாடியை ஒவ்வொரு புதன் கிழமையும் எதிர்பார்க்கலாமா? கண்ணாடி அழகு!!

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget