Spencer Tunick என்ற புகைப்படக்காரருக்கு வேலை, உலகின் முக்கிய கட்டடங்கள், இயற்கை பிரதேசங்கள் போன்ற இடங்களில் ஆண் பெண் பேதமில்லாமல் நிர்வாணமாக உலாவவிட்டு படம் பிடிப்பது.
இஸ்ரேலில் உள்ள செங்கடலில் ஆண்டொன்றிற்கு 4 அடி தண்ணீர் மட்டம் இறங்குகின்றது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள், அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை வரவழைக்கத்தான் இந்த முயற்சி என்று Tunick கூறியுள்ளார். இந்த மனுஷன் பேசிப் பேசியே ஆயிரம் பேர்களின் மனத்தை மாத்தி இப்படி அம்மணமா இறக்கிவிட்டிருக்கு. ஆண், பெண் இரு பாலாரும் 18-77 வயது வரை இருந்தனர்.
இன்னும் சில நாள் போனால் மனிதர்கள் யார் நினைத்தாலும் செங்கடலில் குளிக்க முடியாது. இயற்கை சீற்றத்தை விட மனிதன் போடும் குப்பைகளாலும், வெளியிடும் நச்சு வாயுக்களாலுமே பூகோளம் மாறிவருகிறது. இதைப் பற்றிய அறிவு மக்களை சென்றடைய வேண்டும் என்றே இப்படி செய்கிறேன் என்று வேறு சொல்லியிருக்கிறார்.
எனக்கென்னவோ நாயகன் பட Back Music உடன் “அங்கிள், நீங்க நல்லவரா, கெட்டவரா?” என்று கேட்க தோன்றுகிறது.
ஆனால் Tunickற்கு பெரும் கவலை என்னவென்றால் வேடிக்கை பார்ப்பதற்கு பல பேர் கூடியதால் அவர் நினைத்த சில ஷாட்டுகள் சரியாக வரவில்லையாம். ஆயிரம் பேர் இப்படி நின்றால் பார்ப்பதற்கு இரண்டாயிரம் பேர் என்றாலும் வருவார்கள் தானே. பாருங்கள் விமானத்தில் கூட வந்து பார்த்திருக்கிறார்கள்.
அப்பாடியோவ், பெரிய சாதணை தான் செய்திருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த மனுஷன் 2007ம் ஆண்டு மெக்சிகோ சிட்டியில் 18,000 பேரை வைத்து இப்படி படம் பிடித்திருக்கிறாராம். எனக்கென்றால் இப்படி படம் பிடிக்க ஆசைப் படும் இவரைப் பார்த்து கவலைப்படுவதா அல்லது இவர் சொன்னதும் இப்படி ஓடி வரும் மக்களை சொல்வதா என்றே தெரியவில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!
2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க. பகிர்வுக்கு நன்றி நண்பா
நண்பா இல்லை நண்பா, நண்பி.
Post a Comment